
வாஷிங்டன், செப்டம்பர்-11 – அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியும், பாரம்பரிய அரசியல் ஆர்வலருமான சார்லி கெர்க் (charlie Kirk) நேற்று Utah மாநில கல்லூரி நிகழ்ச்சியொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறையின் அபாயத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சுடப்படுவதற்கு முன்பு, Utah பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில், “The American Comeback” மற்றும் “Prove Me Wrong” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை கூடாரத்தின் கீழ், கையில் மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்த கெர்க் காணப்படுகிறார்.
அப்போது ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டவுடன், கெர்க் தனது வலது கையால் மேலேத் தொட முயன்றபோது, அவரது கழுத்தின் இடது பக்கத்திலிருந்து அதிக இரத்தம் பாய்வது காட்சியில் தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினார்கள்.
சந்தேக நபர் இதுவரை கைதுச் செய்யப்படவில்லை.
கெர்க் உரையாற்றிய பல்கலைக்கழகத்தில் போலீஸார், ஒருவரை காவலில் எடுத்திருந்தாலும், அவர் சம்பவத்துக்கு தொடர்பில்லாதவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கெர்க்கின் கொலைக் குறித்து அதிர்ச்சித் தெரிவித்த ட்ரம்ப், அவரை “மிகச் சிறந்தவர், மேலும் வரலாற்றில் நிற்கும் நாயகன்” என்றும் புகழ்ந்தார்.
வெறும் 31 வயது கெர்க், இளைஞர் அமைப்பான Turning Point USA-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.