
கோப்பேங், மே 19- கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, கோப்பெங் ஜாலான்
ஈப்போ-கோலாலம்பூரின் 19.5 கிலோமீட்டரில், சிவப்பு நிற சமிக்ஞை விளக்கின் போது, நின்றுக் கொண்டிருந்த மூன்று வாகனங்களை, அதிவேகமாக ஓட்டிவந்த ‘தோயோத்தா ஹிலக்ஸ்’ (Toyota Hilux) வாகனமொன்று மோதித்தள்ளியது.
இந்தச் சம்பவத்தில், வாகனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதே நிலையில், வாகனத்திலிருந்த யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என்று கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் நஸ்ரி டாவூத் (Mohamad Nazri Daud ) தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ‘ஹிலக்ஸ்’ ஓட்டுநர், கடந்த திங்களன்று போலீசிடம் அளித்த புகாரில் தனக்கு ஏற்பட்ட தலைவலி காரணமாகத்தான் இவ்வாறு வாகனமோட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணை இன்னும் நடந்து வருவதோடு, வாகனம் ஓட்டும்போது வாகனத்தை கட்டுப்படுத்தத் தவறிய குற்றத்திற்கு கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.