Latestஉலகம்

தொகுதித் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; வாரணாசியில் பரபரப்பு

வாரணாசி, ஜூன்-21 – இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன் முறையாக தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்குத் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் காரில் ஊர்வலமாக சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

காரின் முன் இருக்கையில் மோடி அமர்ந்திருந்த நிலையில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று அவரை வரவேற்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்து பறந்து வந்த செருப்பு மோடி பயணித்த காரின் முன்புறம் வந்து விழுந்தது.

அங்கிருந்த பாதுகாவலர் உடனடியாக அச்செருப்பை அப்புறப்படுத்தினார்.

செருப்பு வீசியது யார், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உத்திர பிரதேச மாநில போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!