Latestஉலகம்

கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு

நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்று, இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான சுப்ரதா கோஷ், 8,849 மீட்டர் சிகரத்தை அடைந்து திரும்பும் போது இறந்ததாகவும், கடந்த புதன்கிழமை இரவு, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 45 வயதான பிலிப் II சாண்டியாகோ, தெற்கு கோல் பகுதிக்குச் செல்லும் வழியில் இறந்ததாகவும் நேப்பாள சுற்றுலாத் துறை அதிகாரி ஹிமல் கௌதம் கூறியுள்ளார்.

மேலும், அவர்களது உடலை அடிப்படை முகாமுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதோடு, அவர்களது இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும் என்று மலையேற்றங்கள் மற்றும் பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் தலைவர் போத்ராஜ் பண்டாரி கூறியுள்ளார். தொடர்ந்து, அவ்விருவரும், அவர் ஏற்பாடு செய்த சர்வதேச பயணத்தில் உறுப்பினர்களாக இருந்தள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 100 ஆண்டுகளில், இமயமலை பயணங்களில் குறைந்தது 345 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!