Latestமலேசியா

நீர் சேமிப்பு தொட்டி உடைந்தது ; பினாங்கு, கொம்தார் கட்டடத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கியது

ஜோர்ஜ் டவுன், ஜூலை 26 – பினாங்கில், அரசாங்க அலுவலங்கள் அமைந்துள்ள, கொம்தார் கட்டடத்தின் தரைத்தளத்தில், இன்று காலை தண்ணீர் தேங்கியது.

அந்த கட்டடத்திலுள்ள, நீர் சேமிப்பு தொட்டி உடைந்ததை அடுத்து, வழிந்தோடிய தண்ணீர் தரைத் தளத்தில் தேங்கியதாக கூறப்படுகிறது.

அதனால், அந்த 68 மாடி கட்டடத்திலுள்ள, 12 மின்தூக்கிகளின் சேவையும் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ஏறக்குறைய அங்கிருந்த அனைத்து அலுவலகங்களுக்கும் செல்ல முடியாமல் போனது.

அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சிலர், படிகளை பயன்படுத்தி மேலே சென்றதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டடத்தின் 27-வது மாடியிலுள்ள, நீர் தொட்டி உடைந்து நீர் வழிந்தோடியதாக, உள் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்புரவு பணிகள் நிறைவடையும் வரை மின் தூக்கிகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், பொதுமக்கள் கெம்தார் கட்டடத்திற்கு செல்லவதை ஒத்தி வைக்குமாறு, மாநில அரசாங்கம் தனது முகநூல் பதிவு வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!