
புத்ராஜெயா, மே-8, பேராக், பாடாங் ஈப்போ நீர் ஊற்று அருகே ஏராளமான புறாக்கள் செத்துக் கிடந்த சம்பவத்திற்கு தொற்று நோய் காரணமல்ல.
3 புறாக்களின் சடலங்கள் மீது மேற்கொண்ட பரிசோதனைகளின் தொடக்கக் கட்ட முடிவில், Avian Influenza (AI), Newcastle Disease (ND), Adenovirus என எந்தவொரு தொற்று நோயும் கண்டறியப்படவில்லை.
கால்நடை சேவைத் துறையான DVS அதனை உறுதிப்படுத்தியது.
மாறாக, அவற்றின் வயிறு நிரம்பியிருந்தது; கல்லீரல் நிறம் மாறியிருந்தது; இரத்தக் கட்டும் காணப்பட்டது; நுரையீரலில் இரத்தக் கசிவும் இருந்ததாக DVS கூறியது.
இதையடுத்து, அவற்றின் உள்ளுறுப்புகளான ஈரல், இருதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், குடல், மண்ணீரல், போன்றவை ஆய்வுக் கூட சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் அப்புறக்கள் மடிந்துபோனதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய இரசாயணத் துறை சோதனை நடத்தி வருகிறது.
அதனறிக்கை வந்த பிறகே இறுதி முடிவுக்கு வர முடியுமென, DVS கூறியது.
என்ற போதும், விலங்குகளிலிருந்து பரவும் தொற்று நோயிலிருந்து பொது மக்களையும் கால்நடைகளையும் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொது மக்களும், தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பறவைகளோ பிற பிராணிகளோ இறந்துகிடந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் DVS கேட்டுக் கொண்டது.
முன்னதாக, அந்த நீரூற்றுப் பகுதியில் ஏராளமான புறக்கள் செத்துகிடந்த வீடியோ வைரலாகியிருந்தது