
பத்து பஹாட், ஜூன் 19 – கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் வங்காகாளதேசர்களுக்கிடையே ஏற்பட்ட தடியடி சண்டையில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு நீதிமன்றம் இன்று தலா 800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தானை சார்ந்த 29 வயதுடைய வக்கார் அலி, 43 வயதுடைய அப்சல் கான், மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஹோசன் சதாம் ஆகியோர் ஜாலான் கம்போங் தஞ்சோங் லாபோவிலுள்ள ஒரு கடையின் முன் சண்டையிட்டு
குற்றச்சாட்டின்படி, அவர்கள் இருவரும் ஜூன் 12, மாலை 5.30 மணிக்கு இங்குள்ள ஜாலான் கம்போங் தஞ்சங் லபோவில் உள்ள ஒரு கடையின் முன் சண்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அக்குற்றத்திற்கு சுமார் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் வாய்ப்பு அதிகமாயுள்ளது.