
மலாக்கா, மே-30 – மலாக்கா, பாயா ரும்புட்டில் நேற்று காலை 3 வாகனங்களை உட்படுத்திய ஒரு கோர சாலை விபத்தில், 462 பேக்கேட்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீஸ் அதிர்ச்சியடைந்தது.
AMJ நெடுஞ்சாலையில் காலை சுமார் 8 மணிக்கு மோட்டார் சைக்கிள், கார், லாரி ஆகிய மூன்றும் அவ்விபத்தில் சிக்கின.
22 வயது மோட்டார் சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை இழந்து முதலில் காரையும் பின்னர் லாரியையும் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, மலாக்கா போலீஸ் தலைவர் ட்சுல்காய்ரி முக்தார் கூறினார்.
சம்பவ இடத்தில், மோட்டார் சைக்கிளோட்டிக்குச் சொந்தமானதென நம்பப்படும் போதைப்பொருட்கள் சிக்கின.
450 பேக்கேட்டுகளில் 688.81 கிராம் ஹெரோய்ன் வகை போதைப்பொருளும்,
12 பேக்கேட்டுகளில் 13.41 கிராம் எடையிலான methamphetamine வகை போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணைத் தொடருவதாக ட்சுல்காய்ரி சொன்னார்.