Latestமலேசியா

பாரிட் புந்தாரிலுள்ள தொழிற்சாலையில் 47 சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது; 16 வயது மியன்மார் இளைஞன் கொத்தடிமையிலிருந்து மீட்பு

பாரிட் புந்தார், ஜூலை 18 – பாரிட் புந்தர் , சுங்கை ராவாவிலுள்ள தொழிற்சாலையில் பேரா மனித ஆற்றல்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி பரிசோதனையில் 47 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மாலை மணி 3.15 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை நடவடிக்கையில் பழைய உலோக பொருள் மறுசுழற்சி தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலைக்கு வைக்கப்பட்டிருந்த 16 வயது மியன்மார் பையன் ஒருவனையும் அதிகாரிகள் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 43 மியன்மார் பிரஜைகள் மற்றும் நான்கு சீனப் பிரஜைகளும் அடங்குவர்.

புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை , மனித கடத்தலை துடைத்தொழிக்கும் பிரிவு, விபச்சாரம், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் துடைத்தொழிப்பு பிரிவினர் கூட்டாக அந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். நாட்டில் கூடுதலாக தங்கியிருந்தது, பயண ஆவணங்களை கொண்டிருக்காதது, வேலை பெர்மிட் இன்றி வேலை செய்தது, வருகை பாஸை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பேரா மனித ஆற்றல் துறையின் இயக்குநர் முகமட் பவ்சி அப்துல் கனி ( Muhamad Fauzi Abd Ghani ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!