Latestமலேசியா

பினாங்கில் பள்ளிக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நூழிலையில் உயிர் தப்பிய ஆடவர்

பட்டவொர்த், ஜூலை-2 – பினாங்கில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே, ஒரு நபரின் உயிரை அவரின் விவேகமான சிந்தனை, அதிர்ஷ்டம், மற்றும் ஒரு கருப்புப் படிகக் கண்ணாடி காப்பாற்றியது.

நேற்று மாலை 5.30 மணியளவில், சுங்கை ஞியோர் தேசியப் பள்ளிக்கு வெளியே தனது 4 சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த அந்த நபரை, முழு முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் நெருங்கினர்.

அவர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து, ஓட்டுநர் உட்கார்ந்திருந்த பக்கமாகக் கண்ணாடியை நோக்கி பலதடவை சுட்டான்.

பின்னர் இருவரும் விரைந்து தப்பி ஓடினர்.

வாகனத்தில் பல துப்பாக்கிச் சூடுகள் பட்டபோதும், அதிர்ஷ்டவசமாக அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

துப்பாக்கியுடன் அந்த நபர் நெருங்குவதை காரோட்டுநர் முன்கூட்டியே கவனித்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கியின் குழாயை நேரில் பார்த்தபடி, அவர் உடனடியாக தனது இருக்கையை பின்புறம் சாய்த்தார்.

இதனால் கருப்புக் கண்ணாடியின் வழியாக நடந்த துப்பாக்கிச்சூடு, அவரைத் தாக்கவில்லை.

இது ஒரு சில வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது.

அந்நபர் அதிர்ச்சியடைந்தாலும், பாதிப்பின்றி உயிர் தப்பினார்.

அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைத் தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!