Latestமலேசியா

புக்கிட் கெரிஞ்சியில் அதிரடி: 26 சட்டவிரோதக் கடைகளை இடித்தது DBKL

கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 ​வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 26 தற்காலிகக் கடைகளை DBKL அமுலாக்கத்துறையினர் அதிரடியாக அகற்றினர்.

​கடந்த வாரம் வழங்கப்பட்ட இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதிகளில் உள்ள கடைகள் முறையான உரிமம் இன்றி செயல்பட்டதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

​ஆரம்பத்தில் வியாபாரிகள் கால அவகாசம் கோரி முறையிட்டாலும், இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டதை DBKL சுட்டிக்காட்டியது.

​அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகள் உருவாவதைத் தடுக்க அந்தப் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பொது இடங்களை ஒழுங்குபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும் DBKL கூறியது.

​எதிர்கால நடவடிக்கைகளைத் தவிர்க்க, வியாபாரிகள் முறையான வழிகளில் உரிமம் பெற்றுத் தொழில் செய்யுமாறு அது அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!