Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாமில், 5 மீட்டருக்கும் உயரமான பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்

புக்கிட் மெர்தாஜாம், மே 14 – பினாங்கு, பட்டர்வொர்த் கூலிம் நெடுஞ்சாலையிலுள்ள, மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை மணி 4.40 வாக்கில், மேம்பாலத்தில் பயணித்த போது அந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் இரும்பு தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

அதனால் அவர் நிலைத்தடுமாறி, ஐந்து மீட்டருக்கும் உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவர் செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதை, மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக, செப்பெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஹெல்மி அரில் தெரிவித்தார்.

அவ்விபத்தை நேரில் கண்டவர்கள், போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!