Latestமலேசியா

புத்ராஜெயாவில், 16-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்

புத்ராஜெயா, ஜூலை 16 – புத்ராஜெயா, Presint ஒன்பதிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 16-வது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை மணி 8.52 வாக்கில், புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்ததாக, புத்ராஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஏ. அஸ்மாடி அப்துல் அசிஸ் (A.Asmadi Abd Aziz) தெரிவித்தார்.

முன்னதாக, காலை மணி 7.50 வாக்கில், கட்டடத்திலிருந்து அச்சிறுமி விழுந்த சம்பவம் குறித்து MERS 999-க்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாக, அஸ்மாடி சொன்னார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் இரத்தக் கரையை கண்டதோடு, விசாரணையில் நான்கு வயது சிறுமி 16-வது மாடியிலிருந்து கீழே விழுந்தது தெரிய வந்தது.

எனினும், புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, காலை மணி 8.52 வாக்கில் இறந்து விட்டதை, மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அச்சம்பவம் தொடர்பில் விசாரணை தொடரும் வேளை ; சிறுமியின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய சவப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!