Latestமலேசியா

போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டவரின் பேச்சை நம்பி நிறுவன இயக்குனர் ரி.ம 520,00 இழந்தார்

ஜோகூர் பாரு, ஜூன் 3 – இன்ஸ்பெக்டர் லீ கா செங் (Lee Kha Seng) என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரின் பேச்சை நம்பி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர் இணைய மோசடியினால் RM 520,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய அந்த நபர் இது குறித்து புகார் செய்திருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் ( M. Kumar ) தெரிவித்தார்.

வட மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் படையைச் சேர்ந்தவர் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஆடவரிடமிருந்து முதலில் கை தொலைபேசி அழைப்பை பெற்றதாகவும், போலீஸ் நடவடிக்கையின்போது தமக்கு சொந்தமான ATM கார்டை ஒன்றை கண்டுபிடித்தாகவும் இதன் வழி தாம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த நபர் கூறியதாக பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

அதன்பிறகு இன்ஸ்பெக்டர் லீ கா செங் என்பவர் தம்மிடம் பேசியதாகவும் வங்கியிலுள்ள தனது பணம் முடக்கப்படாமல் மற்றும் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பதற்கு உதவுவதாக கூறியதோடு அது தொடர்பாக தனது பெயருடன் வங்கியிலுள்ள பணத்தை முடக்கும் நீதிமன்ற கடித உறையுடன் கொண்ட கடிதத்தையும் ‘Whatsapp’ மூலம் பெற்றதாகவும் அந்த நபர் தமது புகாரில் சுட்டிக்காட்டினார்.

அதன் பின் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதுபோல் வங்கியிலுள்ள ஒட்டு மொத்த பணத்தையும் பட்டுவாடா செய்து ஏமாந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளதால் இது குறித்து குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!