
பொந்தியான், ஜூன் 23 – கடந்த சனிக்கிழமை, மாசாய் கோத்தா புத்ரி தொழில்துறை பகுதியில், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் மூன்று தொழிற்சாலைகள் மற்றும் 15 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் உயிர்சேதங்களேதுமில்லை என்று ஜோகூர் JBPM இன் துணைத் தலைவர் ரோஸ்ஃபரவதி இஸ்மானி இஸ்மாயில் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிற்சலைகள் யாவும் சட்டவிரோதமாக இயங்கிவந்துளன என்று ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்கக் குழுவின் தலைவர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் உரிமம் மற்றும் உள்ளூர் ஊராட்சி மன்றத்தின் (PBT) எவ்வித ஒப்புதலும் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்குவது ஆரம்ப விசாரணையில் தெரிய வைத்துள்ளதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உரிமம் இல்லாததைத் தொடர்ந்து திட்ட அனுமதி (KM), கட்டிடத் திட்டங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஒப்புதல், பொதுப்பணித் துறை (JKR), நீர்ப்பாசனம், வடிகால் துறை (JPS) மற்றும் சுகாதார அமைச்சு (KKM) போன்ற நிறுவனங்களின் ஒப்புதல்கள் இல்லை என்பதும் அறியவந்துள்ளது.
சட்டவிரோதமாக இயங்கும் இந்த வளாகங்களில் தீயணைப்புத் துறை ஒப்புதல்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், இத்தகைய பெரிய விபத்து ஏற்பட்டிருக்கின்றதென்று என்று ஜாஃப்னி குறிப்பிட்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.