Latestமலேசியா

நாயை இழுத்துச் செல்லும் வைரல் காணொளி; 80 வயது முதியவருக்கு மறதி பிரச்சனை

சுங்கை பட்டாணி, ஜூன் 17 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் நாயைக் கட்டி இழுத்துச் சென்ற காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அதில் காணப்படும் அந்த ஓட்டுநர் 82 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் கோலா மூடா காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாயை பொதுமக்கள் அருகிலுள்ள விலங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த முதியவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இக்குற்றம், தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஹன்யான் விளக்கமளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!