
குவாந்தான், மார்ச்-1-மதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு எதிராக உறுதியான, ஆனால் அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
“சட்ட அமுலாக்கம் என்பது உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் தெளிவான விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்; உணர்ச்சிகளால் அல்லது வெளிப்புற அழுத்தத்தால் அல்ல”_ என்றார் அவர்.
இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்பதால், அனைவரும் அதனை மதிக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
மதத்தை அவமதிக்கும் எந்த செயலையும், இன-மத மோதலுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளையும், உறுதியுடன் ஆனால் அறிவார்ந்த முறையில் கையாள வேண்டும் என சுல்தான் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அரசியல் அல்லது மறைமுக நோக்கங்களுக்காக மதத்தை பயன்படுத்தும் முயற்சிகளையும் தடுக்க வேண்டும் எனக் கூறிய அல்-சுல்தான், தலைவர்கள் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மலேசியாவில் மத ஒற்றுமையை காக்கும் பொறுப்பு அனைவருக்குமானது என்றார் அவர்.
பஹாங்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி, கடும் கண்டனங்களைப் பெற்ற நிலையில், அல்-சுல்தான் அப்துல்லா இந்த நினைவூட்டலை விடுத்துள்ளார்.



