Latestமலேசியா

இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக சக்தி வெறி கொண்டவர்களாம்; ஆராய்ச்சியில் கண்டறிவு

வாஷிங்டன், ஜூன்-11 – இறைச்சி சாப்பிடும் தங்கள் சகாக்களை விட சைவ உணவு உண்பவர்களே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் பரிசுகளை உட்படுத்திய சாதனைகளைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருப்பது, புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

போலந்து மற்றும் அமெரிக்காவில் 3,500 க்கும் மேற்பட்ட பெரியவர்களை உட்படுத்திய ஆய்வில், சைவ உணவு உண்பவர்களில் 800 பேர் தங்கள் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதில் அதிக முனைப்புக் காட்டியுள்ளனர்.

வாழ்க்கையில் உயரிய இலட்சியங்களும், புதுமையான சிந்தனை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திராணியும் அவர்களிடம் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது.

அதே சமயம், இறைச்சி உண்பவர்கள், பாரம்பரியமான பண்பு நலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கண்டறியப்பட்டது.

நடைமுறை விதிமுறைகளை மதித்தல், மற்றவர்களை வருத்தப்படச் செய்யாமல் இருப்பது, சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளுக்கு இணங்கிச் செல்வது போன்றவற்றை அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கின்றனர்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கருணை காட்டுதல், அவர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்ற குணநலன்களும் அவர்களிடம் மிகுந்து காணப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய SWPS பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகையில், சைவ உணவின் பின்னணியில் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலன் ஆகிய 3 முக்கிய காரணிகள் உள்ளன.

சைவ உணவு உண்பவர்கள், தங்களது நம்பிக்கைகளை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியும், தனித்துவமாக சிந்திக்கும் சுயாதீன மனோபாவமும் கொண்டிருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

அவர்களின் உயர் உணர்திறன் மற்றும் விழிப்புணர்வு, பொதுவாக கருணையின் பிரதிபலிப்பாக இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உரிய மதிப்புகளை கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!