
கோலாலாம்பூர், ஜூன்-9 – மலேசிய விடுமுறைக்குத் தேவைப்படும் பணத்தைப் திரட்டுவதற்காக 10,670 ரிங்கிட் மதிப்புள்ள ஓர் ஆடம்பர கைப்பையை திருடிய 2 அல்ஜீரிய ஆடவர்களுக்கு, 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 வயது Mohamed Moali, 32 வயது Mohamed Lamine Doudou இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கோலாலாம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதியன்று பிரபலமான பேரங்காடி வளாகத்தில் உள்ள ஒரு கடையில் காலை 11.08 மணிக்கு நகைகள் இருந்த கருப்பு மினி பையைத் திருடியதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
அதே நாளில் பிற்பகல் 3 மணியளவில், விற்பனை உதவியாளரான ஒரு பெண் அலமாரியில் இருந்த தனது கைப்பை காணாமல் போனதைக் கண்டுபிடித்து, போலீஸில் புகார் அளித்தார்.
பின்னர் CCTV கேமரா பதிவைப் போட்டுப் பார்த்ததில், அவ்விரு ஆடவர்களில் ஒருவர் அலமாரியில் இருந்து பையை அகற்றி, ஒரு காகிதப் பையில் வைத்துவிட்டு, வளாகத்தை விட்டு வெளியேறுவது தெரியவந்தது.
பிறகு கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
முறையே வடிவமைப்பாளராகவும் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றும் இருவரும், கைப்பையைத் திருடி விற்று, மலேசியாவில் விடுமுறைக் கழிக்க தேவைப்படும் பணத்தைத் திரட்ட எண்ணியதை போலீஸ் விசாரணையில் கூறினர்.