
பாசிர் மாஸ், கிளந்தான், மே 15 – கடந்த மே 2 ஆம் தேதி, கம்போங் பாங்கோல் சே டோலில் (Kampung Banggol Che Dol), தனது 11 வயது மகனைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய ஆடவர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
முன்னதாக, 47 வயதான அஸ்ரோல்ஃபாண்டி அப் சுகி (Asrolfandi Ab Suki) எனும் அந்த ஆடவர் தனது மகனை காய்கறி கத்தியைப் பயன்படுத்தி மார்பு மற்றும் வயிற்றில் இரண்டு முறை குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனது குற்றத்தை அந்நபர் மறுத்துள்ளார்.
இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனநல சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் தனது மனைவியை மூன்றாவது முறையாக விவாகரத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கை ஜூன் 15 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் தற்போதைய மனநிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.