Latestமலேசியா

மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் ‘அவிரா 2.0’ 2ஆம் ஆண்டு நாடகப் போட்டி

மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக அவிரா நாடகப் போட்டி 2.0 ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவர் பொது மண்டபத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாட்டிலுள்ள உயர்க் கல்வி கழகங்களின் மாணவ மாணவிகளும் கலந்து கொள்கின்றனர்.

அஸ்ட்ரோ தொலைக்காட்சி முன்பு நடத்திய ஓரங்க நாடகத்தைப்போல் இளம் தலைமுறையினரிடையே நாடகத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவிரா 2.0 நாடகப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவரான Kubithra Sambanthan வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இப்போட்டியில் முதல் 5 இடங்களைப் பெறும் குழுவுக்கு ரொக்கத் தொகை, பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படும் .

அதோடு இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தங்குவதற்கான இடம் மற்றும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாடகப் போட்டியை காணவிரும்புவோர் இதற்கான 10 ரிங்கிட் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம்.

மேலும் இப்போட்டிக்கான ஸ்போன்சர்களையும் ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றனர்.

மேல் விவரங்களுக்கு அவிரா 2.0 நாடகப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் Kubithra Sambanthanனை 018-661 0773 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!