
பாங்காக், ஜூன் 3 – வடகிழக்கு தாய்லாந்தில் உணவு தேடி அலைந்த, காட்டு யானை ஒன்று, அங்குள்ள மளிகைக் கடையொன்றில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்காட்டு யானை, ‘காவோ யாய்’ தேசிய பூங்காவிலிருந்து (Khao Yai National Park) வெளிவந்ததெனவும், சாலையோரக் கடைகளில் சுற்றித் திரிவதை பொதுமக்கள் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
10 நிமிடங்களுக்கும் மேலாக கடையிலிருந்த யானை சுமார் 130 ரிங்கிட் மதிப்பிலான சேதத்தை அக்கடைக்கு ஏற்படுத்தி, கடையை விட்டு அகன்றதென்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலும் காட்டு விலங்குகளின் இத்தகைய செயல்கள் அன்றாட வாழ்க்கையை பாதிப்பது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளூ