Latestஉலகம்விளையாட்டு

ரியல் மேட்ரிட் ஆட்டக்காரராக பிரமாண்டமாக அறிமுகமான கிலியன் எம்பாப்பே

மேட்ரிட், (ஸ்பெயின்) ஜூலை-17 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெசி இருவருக்கும் அடுத்து புதியத் தலைமுறையின் மிகச் சிறந்த கால்பந்தாட்டக்காரராக வலம் வரும் கிலியன் எம்பாப்பே (Kilyan Mbappe) ஸ்பெயின் நாட்டின் பணக்கார கிளப்பான ரியல் மேட்ரிட்டில் (Real Madrid) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சாந்தியாகோ பேர்னபியூ (Santiago Bernabeu) அரங்கில் சுமார் 80,000 ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் எம்பாப்பே ரியல் மேட்ரிட் ஆட்டக்காரராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

2009-ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ மேன்சஸ்டர் யுனைட்டட் (Manchester United) அணியிலிருந்து ரியல் அணிக்கு மாறி வந்த போது இதே போன்று அமர்க்களமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதற்கு ஈடாக இப்போது எம்பாப்பேவும் பிரமாண்டமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் அந்த ஜாம்பவான் அணியில் இணைந்துள்ள எம்பாப்பேவுக்கு, முதன்மைத் தாக்குதல் ஆட்டக்காரருக்கான 9-ஆம் எண் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

“இது எனது சிறு வயது கனவு. இப்போது நனவாகியுள்ளது. இது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. ரியல் மேட்ரிட்டுக்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன்” என 25 வயது எம்பாப்பே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

2018-ல் பிரான்ஸ் மூலம் உலகக் கிண்ணத்தை வென்றவருமான எம்பாப்பேவுக்கு, ரியல் அணியில் ஆண்டுக்கு வரிக்குப் பிந்தையச் சம்பளமாக 15 மில்லியன் யூரோ அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 77 மில்லியன் வழங்கப்படும்.

இதற்கு முன் தனது PSG அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ரியல் மேட்ரிட்டில் இணைந்திருப்பதன் மூலம் அவரின் மற்றொரு முக்கியக் கனவான சாம்பியன்ஸ் லீக் (Champions League) கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!