Latestமலேசியா

ரெம்பாவ் அருகே டிரேய்லரை மோதிய விரைவுப் பேருந்து; 4 பேர் காயம்

ரெம்பாவ், ஜூலை-12 – 30 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து இன்று அதிகாலை ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் டிரேய்லரை மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 4 பெண் பயணிகள் சிறியக் காயங்களுக்கு ஆளாகினர்.

அதிகாலை 2.50 மணியளவில் அவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.

மீட்புக் குழு வருவதற்குள் அனைத்துப் பயணிகளும் தாங்களாகவே பேருந்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
காயமடைந்தவர்களுக்கு அம்புலன்ஸ் வரும் வரை சம்பவ இடத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டன.

விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!