Latestமலேசியா

லுமுட்டில் வட்டி முதலை கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதால் காரும் மோட்டார் சைக்கிளும் சேதம்

லுமுட், ஜூன் 8 – சித்தியவான் கம்புங் கோஹ்விலுள்ள ( Kampung Koh) ஒரு வீட்டு வளாகத்தில் வட்டி முதலையைச் சேர்ந்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. விடியற்காலை மணி 3.40 அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த சதிநாச வேலையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரை தேடும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக மஞ்சுங் ( Manjung) மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Nordin Abdullah தெரிவித்தார். தகவல் அறிந்து 56 வயதுடைய பெண்மணிக்கு சொந்தமான வீட்டிற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயை மும்மூரமாக அனைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் காலி போத்தல் ஒன்றையும் போலீசார் கண்டனர். இதற்கு முன்னதாக அவ்வீட்டில் உள்ளவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலை கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்களால் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டதாக விசாரணையின் மூலம் தெரிய வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளரின் மூன்றாவது மகன் இதற்கு முன் வாங்கியிருந்த கடனை திரும்ப செலுத்தாமல் இருந்ததாகவும் முகமட் நோர்டின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!