Latestஉலகம்

வியட்நாமில், 4.2 மீட்டர் உயரத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக் ; ஓட்டுனருக்கு அபராதம்

வியட்நாமில், 4 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணித்த, சிறு ரக டிரக் ஒன்றை கண்டு அந்நாட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததோடு அந்த டிரக்கை செலுத்திய ஓட்டுனருக்கு அபராதத்தையும் விதித்துள்ளனர்.

ஜூன் 25-ஆம் தேதி, தலைநகர் ஹனோயிலுள்ள, குவென் திராய் (Nguyen Trai) எனுமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட டிரக்கில், 4.2 மீட்டர் உயரத்திற்கு, பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதோடு, அந்த டிரக் ஓட்டுனர் சாலை சமிக்ஞை விளைக்கை மீறி பயணித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனால், சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, டிரக் ஓட்டுனருக்கு எதிராக வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!