Latestஉலகம்மலேசியா

வெடிகுண்டு மிரட்டலால் தாய்லாந்தில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

பேங்கோக் – ஜூன்-13 – ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான AI 379 விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, புது டெல்லிக்குப் பயணமான அவ்விமானம் அந்தமான் தீவுக்கு மேலே ஒரு பெரிய வட்டமடித்த பின்னர், புறப்பட்ட இடமான புக்கெட் தீவுக்கே திரும்பியது. விமானம் அவசரமாகத் தரையிறங்கியதும் அதிலிருந்த 156 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து தாய்லாந்து விமான நிலைய அதிகாரத் தரப்பு கருத்துரைக்கவில்லை.

ஏர் இந்தியா விமானம் நேற்று இந்தியாவின் குஜராத்தில் விழுந்து விபத்துக்குளாகி, ஓருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பயணிகளும் நேற்று உயிரிழந்த நிலையில், அந்நிறுவனத்தின் இன்னொரு விமானம் இந்த வெடிகுண்டு மிரட்டலை எதிர்நோக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!