Latestமலேசியா

ஸ்தாப்பாக்கில் மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவன் 9வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

கோலாலம்பூர், ஜூலை-26 – மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவன் என நம்பப்படும் 17 வயது மாணவன், கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தான்.

அச்சம்பவம் நேற்று காலை நிகழ்ந்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் லாசிம் இஸ்மாயில் (Mohd Lazim Ismail) தெரிவித்தார்.

கீழ் தளத்தில் விழுந்துக் கிடந்த மாணவன் உயிரிழந்து விட்டதை அங்கு விரைந்த மருத்துவக் குழு உறுதிபடுத்தியது.

அவன் தவறி விழுந்ததைக் குடும்பத்தினர் கவனிக்கவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

மனநலப் பிரச்னைக்காக மருத்துவமனையில் அவன் சிகிச்சைப் பெற்று வந்திருப்பதும் தெரிய வந்தது.

தற்போதைக்கு அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!