Latestமலேசியா

16 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிடும் -முகமட் ஹசான்

கோத்தா திங்கி, ஜூலை 14 – எதிர்வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னனி தனித்தே போட்டியிடக்கூடும் என அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் துணைத்தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

எந்தவொரு கூட்டணியுடன் இணையும் கட்டாயத்தை தேசிய முன்னணி கொண்டிருக்கவில்லை. நாட்டை நிர்வகிப்பது என்ற உடன்பாட்டின் கீழ் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்து பங்காற்றுவது என்பது மட்டுமே இதற்கு முந்தைய ஏற்பாடாக இருந்ததாக அவர் கூறினார்.

2027ஆம் ஆண்டில் சொந்தமாக போட்டியிடுவதற்கு நாம் தயாராய் இருக்கிறோமோ என நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறாவிட்டால் இதர கட்சிகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும் என தெங்காரா ( Tenggara ) அம்னோ கூட்டத்தை தொடக்கி வைத்து பேசியபோது முகமட் ஹசான் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுக்கு பின் பொருளாதாரம் மீட்சி காண்பதை உறுதிப்படுத்துவதற்காக நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரு பகுதியாக அம்னோ இணைந்ததாக அவர் கூறினார். நாம் பக்காத்தான் ஹராப்பானில் இணைவோம் என சிலர் கூறுகின்றனர். அப்படியொரு திட்டம் எதுவும் இல்லையென முகமட் ஹசான் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!