Latestமலேசியா

2025 தீபாவளி கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை

கோலாலம்பூர், அக்டோபர் -6,

வரவிருக்கும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்வி அமைச்சு (MOE) நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு கூடுதல் விடுமுறைகளை அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

2025 மற்றும் 2026 கல்விக் ஆண்டுக் கால அட்டவணையின் படி, கெடா, கிளந்தான், திரெங்கானு, ஆகிய மாநிலங்களிலுள்ள பள்ளிகள் அக்டோபர் 19 மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதிகளில் கூடுதல் விடுமுறையைப் பெறுகின்றன.

மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் விடுமுறை விடுக்கப்படுகின்றன.

சரவாக்கில், தீபாவளி தினமான அக்டோபர் 20 ஆம் தேதி அன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையை அனுபவிக்கவுள்ளதால், குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!