Latestமலேசியா

2026 இல் ஜோகூருக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு ஜோகூர் பாரு மாநகரில் 7 இடங்களில் சிறப்பு போலீஸ் நடவடிக்கை

ஜோகூர் பாரு, ஜூன் 18 – 2026 இல் ஜோகூருக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு ஜோகூர் பாரு , நகரத்தைச் சுற்றியுள்ள ஏழு முக்கிய இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணி நடவடிக்கையில் ஜோகூர் போலீஸ் ஈடுபடும்.

மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்த பொதுமக்களின் கருத்தை வலுப்படுத்தும் முயற்சியாக ஜூன் 14 முதல் இந்தப் பணி மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ M , குமார் கூறினார் . சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான முக்கிய இடங்களில் பரபரப்பான நேரங்களில் 80 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுவார்கள்.

“ஜோகூர் பார்வையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை வழங்குவதற்காக நடைபயிற்சி இடங்கள் மற்றும் வர்த்தக வளாகங்களை கண்காணிப்பதோடு , பார்வையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் குமார் தெரிவித்தார். இதுதவிர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரோந்து போலீஸ்காரர்களும் தங்களது வழக்கமான பணியை தொடர்வார்கள் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!