
கோலாலும்பூர், மே 20 – 46வது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை வரை, ரேபிட் கேஎல்-இன் (Rapid KL), ரயில் மற்றும் பேருந்து சேவைகள், காலை மற்றும் மாலை நேரங்களில் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாரம் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை ஈடுசெய்ய, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் இரயில் சேவைகளை ஏற்பாடு செய்திருப்பதாக பிரசாரனா (Prasarana) கூறியுள்ளது.
தொடர்ந்து, கேஎல்சிசி (KLCC) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் பேருந்து பயனர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில் சேவைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தை முன்னதாகவே திட்டமிடவும், Rapid KL இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக அறிவிப்புகளை உடனுக்குடன் கண்காணிக்கவும் PULSE பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுமாறு, Prasarana பணித்துள்ளது.