பெசூட், ஏப்ரல் 2 – திரங்கானு, பெசூட்டில், மோட்டார் சைக்கிள் ஒன்று காரை மோதி விபத்துக்குள்ளானதில், UniAZA எனும் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், தலைநகர் ஸ்ரீ டமன்சாராவை சேர்ந்த 22 வயது முஹமட் பைசால் ஹக்கிமி ஹாபிஸ் என்பதை, பெசூட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் ரோசாக் முஹமட் உறுதிப்படுத்தினார்.
நேற்றிரவு மணி 8.30 வாக்கில், நோன்பு துறந்த பின்னர் வீடு திரும்பும் வழியில் அம்மாணவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, அவர் செலுத்திய யமஹா 135LC ரக மோட்டார் சைக்கிள், எதிரே வந்த புரோட்டோன் ஈஸ்வரா ஏரோபோக் ரக காரை மோதி விபத்துக்குள்ளானது.
அதனால் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.