Latestமலேசியா

ரவாங்கில், 128 வெளிநாட்டவர்கள் மீது சோதனை ; 29 பேர் கைது

ரவாங், ஜூன் 24 – சிலாங்கூர், ரவாங்கிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 128 வெளிநாட்டாவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 29 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

இன்று காலை மணி 11 வாக்கில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைதுச் செய்யப்பட்டவர்களில், 21 பேர் வங்காளதேச நாட்டவர்கள், எஞ்சிய எண்மர் நேப்பாளிகள் ஆவர்.

கடந்த மூன்று வாரங்களாக, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் அதிகரித்து காணப்பட்ட அந்நிய தொழிலாளர்கள் குறித்து, பொதுமக்கள் தகவல் வழங்கியதாக, மலேசிய குடிநுழைவுத் துறையின் அமலாக்க பிரிவு இயக்குனர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 21 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், முறையான ஆவணம் எதையும் வைத்திருக்கவில்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து,சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளம் ஜூலை முதலாம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!