Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

4 கின்னஸ் உலகச் சாதனைகளுக்குக் குறி வைக்கும் மகா கும்பமேளா

பிரயாக்ராஜ், பிப்ரவரி-7  – இந்தியா உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா, 4 கின்னஸ் உலகச் சாதனைகளுக்குக் குறி வைத்துள்ளது.

முதல் முயற்சியாக வரும் பிப்ரவரி 14 அன்று 15,000 துப்புரவுப் பணியாளர்கள் ஒன்றிணைந்து, பக்தர்கள் புனித நீராடும் இடங்களை சுத்தம் செய்வார்கள்.

முந்தையச் சாதனையாக, 2019-ல் 10,000 துப்புரவுப் பணியாளர்கள் அதில் ஈடுபட்டனர்.

இரண்டாவது உலக சாதனை முயற்சியாக, பிப்ரவரி 15-ல், 300க்கும் மேற்பட்டோர், சங்கத்தில் உள்ள நீரோடையை சுத்தப்படுத்தவுள்ளனர்.

மறுநாள் பிப்ரவரி 16-ஆம் தேதி, அணிவகுப்பு மைதானத்தில் 1,000 மின்னியல் ரிக்‌ஷாக்களை ஒரே நேரத்தில் இயக்கி புதிய உலக சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைசியாக பிப்ரவரி 17-ல் கங்கை பந்தலில் 8 மணி நேரங்களில் 10,000 பேர் கையால் அச்சடித்து உலக சாதனை படைப்பார்கள்.

நடப்பில், 8 மணி நேரங்களில் கைரேகை ஓவியம் வரைந்த உலக சாதனையை பிரயாக்ராஜ் மேளா ஆணையம் வைத்துள்ளது;

2019 கும்பமேளாவின் போது 7,664 நபர்கள் கைரேகை ஓவியம் வரைந்து அச்சாதனையை ஏற்படுத்தினர்.

இச்சாதனை முயற்சிகள் கின்னஸ் புத்தகம் மற்றும் உலகச் சாதனை குழுவால் கண்காணிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

இதற்காக கின்னஸ் உலகச் சாதனை அதிகாரத் தரப்பு விரைவில் பிரயாக்ராஜ் வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!