Latestமலேசியா

ராட்சஷ குழியில் லோரியுடன் உள்வாங்கிய ஆடவரின் உடல் மீட்பு

தோக்யோ, மே 2 – டோக்யோவின் வடக்கே உள்ள யாஷியோவில் (Yashio) உள்வாங்கிய ஒரு ராட்சஷ குழியில் லோரி ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து காணாமல்போன 70 வயதுடைய லோரி ஓட்டுநரின் உடல் இறுதியாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 30 மீட்டர் (மீ) தொலைவில் கழிவுநீர் குழாயில் சிக்கிய லாரியின் கேபினில் மனித உடலைப் போன்ற அவயங்கள் காணப்பட்டதை சைட்டாமா (Saitama ) மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக Kyoda செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹைட்ரஜன் சல்பைட் வாயு அளவுகள் மற்றும் நீர் ஓட்டம் பாதுகாப்பானவை என்று பரிசோதனை மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு மற்றும் போலீஸ் குழுக்கள் குழாயினுள் நுழைந்து முழு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று இதற்கு முன் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி சாலை சந்திப்பில் திடீரென 40 மீட்டர் அகலமும்
15 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு புதைகுழி உருவானபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. தொடர்ந்து மண் இடியக்கூடும் என்ற சாத்தியம் இருந்ததால் மீட்பு நடவடிக்கை கடந்த பிப்ரவரி 9ஆம்தேதி நிறுத்தப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!