
குவாந்தான், மே 2- கடந்த செவ்வாய்க்கிழமை, ரொம்பினில் உள்ள புக்கிட் இபாம் முஅத்ஸாம் ஷா வனப்பகுதியின் (Hutan Simpan Bukit Ibam Muadzam Shah) சுங்கை கனோவில், சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியதாக, சந்தேகத்தின் பேரில் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட இரண்டு வங்காளதேச பிரஜைகள் உட்பட மூன்று பேர், Batalion 7 PGA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுரங்க நடவடிக்கைகள், லைசென்ஸ் இன்றி நடைபெற்றதாகவும், அவ்விரு வங்காளதேச ஆடவர்களிடம், அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லையென்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வேளையில் சுரங்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட RM1.25 மில்லியன் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு மாநில கனிமங்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்று அறியப்படுகின்றது