
கோலாலம்பூர், மே 8- கடந்த மார்ச் 31-ஆம் தேதி, இன, மத உணர்வுகளைப் புண்படுத்தும் காணொளியை டிக்டோக்கில் பதிவேற்றிய ஆடவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலேசிய அரசின் முதன்மை சட்ட ஆலோசகர்களின் ஒப்புதலைத் தொடர்ந்துதான் முகமது ஷபிக் அப்துல் ஹலீமுக்கு (Mohamad Shafiq Abdul) இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்று மலேசிய தொடர்புதுறை ஆணையம் (MCMC) வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சமூக ஊடக பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்றும் மதம், இனம் அல்லது அரச நிறுவனங்களுக்கெதிரான, உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்றும் MCMC அறிவுறுத்தியது.
தொடர்ந்து இவ்வழக்குத் தவறான செய்திகளைப் பரப்பும் குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது