
கோலாலம்பூர், மே 16- பிறப்பு பத்திர விண்ணப்பத்தின் போது, தேசிய பதிவுத் துறையிடம் (JPN) தவறான தகவல்களை வழங்கிய 6 ஆண்கள், இன்று நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, அவர்களுக்கு 500 முதல் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 முதல் 2022 வரை தலைநகரைச் சுற்றியுள்ள பல JPN நிலையங்களில் 6 குழந்தைகளின் பிறப்பு பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது வேண்டுமென்றே தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக அவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது..
மேலும், 56 மற்றும் 71 வயதுடைய அவர்கள் அனைவரும் அபராதத்தைத் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த அறுவரில், 64 வயதான எஸ். ராஜந்திரன், தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், நீதிமன்றம் அவருக்கு 1,200 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ளது.
தொடர்ந்து பொதுமக்கள் இத்தகைய குற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.