
ஜோர்ஜ் டவுன், மே 20 – Tanjung Tokong கில் Jalan Seri Tanjung Pinang
கட்டுமான பகுதியில் இரண்டாவது உலக போர்க்கால வெடிகுண்டு ஒன்று திங்கட்கிழமை இரவு கண்டுப்பிடிக்கப்பட்டது. இரவு மணி
9.42 அளவில் பொதுமக்களிடமிருந்து அந்த வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசிற்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரொசாக் முகமட் ( Abdul Rozak Muhammad ) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட சோதனையைச் தொடர்ந்து இன்னும் வெடிக்கப்படாமல் இருந்த இரண்டாவது உலகப் போர்க்கால வெடிகுண்டு அதுவென உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான இடத்தைச் சுற்றியுள்ள பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, வெடிகுண்டை இன்று அந்தப் பிரிவு பாதுகாப்பாக அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக Abdul Rozak கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கும் காயமோ அல்லது சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.