
பாங்காக் , மே 23 – 2025-ஆம் ஆண்டிறுதிக்குள், நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைப்பதை இலக்காக கொண்டிருப்பதாக தாய்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்தொன்றில் உரையாற்றிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.
200கும் மேற்பட்ட தாய்லாந்து மலேசியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மலேசியாவை, மின்சார வாகன உற்பத்தி மற்றும் புத்தாக்க மையமாக மாற்றும் நோக்கிலும், இந்த அமலாக்கம் திட்டமிடப்பட்டுள்ளதென்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சராகவும் இருக்கும் ஃபடில்லா கூறியுள்ளார்.
மேலும், தற்போது நமது நாட்டில் சபா சரவாக் உட்பட நேரடி மின்னோட்ட (DC) சார்ஜர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.
இச்சிக்கலைக் களைவதற்குப் பெட்ரோனாஸ் மற்றும் பிற தொழில்துறை கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள் மற்றும் மலேசியா முழுவதும் போதுமான சார்ஜிங் நிலையங்களை உருவாக்க உறுதிக் கொண்டுள்ளதாக துணை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.