
புத்ராஜெயா, மே-26 – 28 முதல் 32 வாரங்கள் வரை கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு Tdap நோய்த்தடுப்பூசிகளை இன்று முதல் இலவசமாக வழங்குகிறது.
tetanus, difteria, pertusis போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் இந்த Tdap தடுப்பூசி, நாடு முழுவதும் தாய்மார்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் அனைத்து KKM ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் அதனைத் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பகால பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; குறிப்பாக அடிப்படை நோய்த் தடுப்பு அட்டவணையை முடிப்பதற்கு முன்பே கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய pertusis இருமலுக்கு எதிராக என அவர் சொன்னார்.
இத்தடுப்பூசிகள், தாய்கோ அல்லது சேய்க்கோ எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாமல், பயன்படுத்துவதற்குக் பாதுகாப்பானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்பது அனைத்துலக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
என்ற போதிலும், இந்த Tdap தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை; குழந்தையின் பாதுகாப்பை முன்னிறுத்தி அதனை எடுத்துக் கொள்ள கர்ப்பிணிகள் ஊக்குவிக்க மட்டுமே படுவதாக Dr சுல்கிஃப்ளி விளக்கினார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது வாழ்நாள் முழுவதும் தடுப்பூசி போடும் யுக்த்தியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.