
காத்மாண்டு, நேப்பால் ,மே 27- மூத்த மலை வழிகாட்டியான ‘கமி ரீட்டா ஷெர்பா’ குழுவைச் சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க மலையேறும் வழிகாட்டி , 31வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்து, தனது உலக சாதனையைப் புதுப்பித்துள்ளதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் குழுவை வழிநடத்திச் சென்ற அவர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, சிகரத்தை அடைந்ததாக செவன் சம்மிட் ட்ரெக்ஸ் தலைவர் மிங்மா ஷெர்பா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மலைவாசி இனத்தவரான பசாங் தாவாவும் அவருக்கு இணையான போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள சுற்றுலா ஆணையத்தின் கூற்றுப்படி, தற்போது மொத்தம் 468 மலையேறுபவர்கள் அனுமதி பெற்றுள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.