
கோத்தா பாரு, மே 30 – கிளந்தானில் நீரிழிவு மற்றும் இரத்தத்தில் கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களின் விழுக்காடு விகிதம் தேசிய அளவை விட அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிளந்தான் மக்களில் 16.3 விழுக்காட்டினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய அளவில் இது 15.6 விழுக்காடு என 2023 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின் முடிவுகள் காட்டுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) தெரிவித்தார். கிளந்தானில் 34.9 விழுக்காடு மக்கள் இரத்தத்தில் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டதோடு , தேசிய அளவில் இது 33.3 விழுக்காடாக இருப்பபதாக அவர் கூறினார்.
இருப்பினும், கிளந்தனில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக எடைக்கான விகிதங்கள் முறையே 27.9 விழுக்காடு மற்றும் 51.6 விழுக்காடாக இருப்பதோடு , இது தேசிய அளவை விடக் குறைவாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் கலாச்சாரத்தை விரிவான முறையில் திரட்டுவதற்கான ஒரு தளமாக தேசிய ஆரோக்கியமான மலேசியா அமைந்துள்ளது. சிகிச்சையை மையமாகக் கொண்ட சேவைகளிலிருந்து தடுப்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பிற்கு மாறுதலுக்கு இது துணைரியும் என கிளந்தான் ஆரோக்கிய மையத் திறப்பு தினத் விழாவில் உரையாற்றும் போது Dzulkefly கூறினார்.