Latestமலேசியா

30 மீட்டர் பள்ளத்தில் காரோடு விழுந்த ஒரு நாளுக்குப் பிறகு முதியவர் பாதுகாப்பாக மீட்பு

கெளுகோர்; மே-31 – பினாங்கு கெளுகோரில் வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 78 வயது முதியவர், 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்த தனது காரோடு பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

உறவினர் வீட்டிலிருந்து கிளம்பியவர் இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது மனைவியின் கைப்பேசிக்கு அழைத்த Teh Seng Keat, தான் பள்ளத்தில் விழுந்து விட்டதாகவும் வீடு திரும்ப வழி தெரிவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைப்பேசி சமிக்ஞையை வைத்து பாலேக் பூலாவ், ஜாலான் பாருவில்தான் அவர் உள்ளார் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தீயணைப்பு-மீட்புப் படையினர், பள்ளத்தில் கிடந்த காரிலிருந்து அம்முதியவரை stretcher உதவியுடன் மேலே கொண்டு வந்தனர்.

இலேசான காயங்கள் ஏற்பட்டு சோர்வாகவும் இருந்த அவர் பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!