
குவாந்தான், ஜூன் 7 – இன்று, நள்ளிரவு 12 மணிக்கு மேல், ஜாலன் ஜெராந்துட் ஃபெரியில் (Jalan Jerantut Feri), ‘பெரோடுவா பேஸ்ஸா’ மற்றும் ‘டொயோட்டா அல்பார்ட்’ ஆகிய 2 வாகனங்களுக்குமிடையே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
அதே சமயத்தில் ‘டொயோட்டா அல்பார்ட்டில்’ பயணித்த 2 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட மூவர் காயங்களுடன் உயிர் தப்பியுதாக பகாங் மாநில தீயணைப்பு துறையின் இயக்குனர் முகம்மது ரசாம் தஜா ரஹீம் (Mohd Razam Taja Rahim) கூறியுள்ளார்.
மேலும் காயங்களுக்கு ஆளான அந்த மூவரும் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜெராந்துட் சாலையில் எதிர் எதிரே அவ்விரு வாகனங்களும் மோதிக்கொண்ட நிலையில், வாகனங்களைச் செலுத்தும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென்று காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.