
மலாக்கா, ஜூன் 12 – மலாக்கா, புக்கிட் ரம்பாய் , தாமான் ரம்பாய்
முத்தியாராவில் தனித்து வாழும் தாய் ஒருவரும் அவரது 21 வயது மூத்த மகனும் இறந்து கிடந்தனர். அவ்விருவரும் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த சம்பவத்தில் அக்குடும்பத்தை சேர்ந்த மற்றொரு உறுப்பினர் காயங்களுடன் உயிர் தப்பியதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டின் உள்ளே இறந்து கிடந்த இருவரில் ஒருவர் பள்ளி ஆசிரியை என நம்பப்படுகிறது. கொலை நடந்த வீட்டில் போலீஸ் தடயவியல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது வீட்டிற்கு முன்புறம் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் ஆடவர் கீழே விழுந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் இது குறித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலீஸ் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது.