Latestமலேசியா

நகைக்கடை ஊழியரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி நகையை திருட முயன்றவன் பிடிபட்டான்

லங்காவி, ஜூன் 19 – லங்காவியில் குவாவில் ஒரு நகைக்கடை ஊழியரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி யில் 50,000 ரிங்கிட் மதிப்புடைய நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சந்தேகப் பேர்வழி ஒருவனை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

இந்தச் சம்பவம் இன்று காலை சுமார் 11.48 மணியளவில் ஜாலான் பாண்டக் மாயா 5 இல் உள்ள நகைக்கடையில் நடந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார். முகமூடி அணிந்த உள்நாட்டைச் சேந்த 45 வயது சந்தேக நபர், பாராங் கத்தியுடன் நகைக் கடைக்குள் நுழைந்து அக்கடையின் ஊழியரின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளான் .

தொடர்ந்து அவன் வைத்திருந்த பாராங் கத்தியைப் பயன்படுத்தி நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையை உடைத்துள்ளான் . பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியபோது கடையின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களால் துரத்தப்பட்டதைத் தொடர்ந்து ரோந்து பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Shariman Ashari குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!