
ஜோர்ஜ் டவுன் , ஜூன் 23 – பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரை தாக்கியதற்காக இரண்டு ஆடவர்கள் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். 19 முதல் 20 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக இன்று முதல் ஜூன் 25 வரை விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்களை தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஷரிரா அப்துல் சலீம் (Shyarirah Abdul Salim) உத்தரவிட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 323 ஆவது பிரிவு மற்றும் 1955 ஆம் ஆண்டின் சிறு குற்றங்கள் 14ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இரண்டு பேரும் நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பினாங்கு போலீஸ் நிலையம் முன் கைது செய்யப்பட்டனர் .