Latestமலேசியா

பாலியல் தொழிலில் மகளை கட்டாயப்படுத்தினார் தாய் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன் 25 – பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துவதற்காக தனது மகளை கடத்தியதாக தனித்து வாழும் தாய் ஒருவர் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 44 வயதான அப்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜூன் 7ஆம்தேதிக்குமிடையே சித்தியவான், தாமான் செந்தோசா 2 இல் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். பாலியல் தொழிலாளியாக வேலை செய்ய கட்டாயப்படுத்தி, தனது 21 வயது மகளை சுரண்டுவதற்காக அவர் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

2007ஆம் ஆண்டின் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் 12 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதே சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் வேலையில்லாத அந்த பெண் மீது மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டுவரப்பட்டது. வயது குறைந்த தனது மகளை பாலியல் தொழில் நடவடிக்கைக்காக கடத்தியதாகவும் 2022 ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டு செம்டம்பர் 3ஆம் தேதிக்குடையே இக்குற்றத்தை புரிந்ததாகவும் அப்பெண் மீது குற்றஞ்சாட்டபபட்டது. நீதிபதி அஸிஸா அகமட் முன்னிலையில் கொணடுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டையும் வேலையில்லாத அப்பெண் மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!